• முகப்பு
  • குற்றம்
  • திருச்சி அருகே மூதாட்டி கொலை வழக்கில் தண்ணீர் கேன் விநியோக வாலிபர் கைது.

திருச்சி அருகே மூதாட்டி கொலை வழக்கில் தண்ணீர் கேன் விநியோக வாலிபர் கைது.

JK

UPDATED: Jul 10, 2024, 9:52:20 AM

Latest District News in Tamil

திருச்சி மாவட்டம், மணப்பாறை மஸ்தான் தெரு வைச் சேர்ந்தவர் நாகப்பன் (75) மனைவி கல்யாணி(69). கடந்த மூன்றாம் தேதி அவரது வீட்டின் சமையலறையில் இறந்து கிடந்தார். மேலும் அவர் அணிந்திருந்த தங்கம், வைர நகைகளைக் காணவில்லை. 

இதுகுறித்த புகாரின்பேரில் மணப்பாறை காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

Latest Trichy News & Live Updates - 

இதில், அவரது வீட்டுக்கு குடிநீர் விநியோகிக்கும் பண்ணப்பட்டி சமத்துவபுரத்தைச் சேர்ந்த கேசவன்(28) என்பவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர் 

அப்போது கேசவன் தனது நண்பர்களான ராமச்சந்திரன் என்கிற வீரா(35), வெங்கடேஷ்(36), ராமன் (28), பழனிசாமி ஆகியோருடன் சேர்ந்து நகைகளுக்காக, கல்யாணியை கொலை செய்தது தெரியவந்தது.

News

இதனையடுத்து கேசவனைப் கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து சுமார் 18 பவுன், 1ஜோடி வைரத்தோடு, நகைகள் மற்றும் ரூ.30ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். 

மேலும், இக்கொலை கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ராமச்சந்திரன், வெங்கடேஷ், ராமன் தேடி வருகின்றனர்.

 

VIDEOS

Recommended