• முகப்பு
  • குற்றம்
  • நாற்பது நாள் பிறகு பிரேதத்தை தோண்டி எடுத்து விசாரணை மேற்கொண்டு கைது செய்த காவல்துறை 

நாற்பது நாள் பிறகு பிரேதத்தை தோண்டி எடுத்து விசாரணை மேற்கொண்டு கைது செய்த காவல்துறை 

சுரேஷ் பாபு

UPDATED: Jul 24, 2024, 2:12:24 PM

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் மாவட்டம், முருகஞ்சேரி கிராமம், வ.ஊ.சி. தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் பிரவீன்குமார் (வயது 19). இவர் கூலி தொழிலாளி ஆவார். இந்த நிலையில் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு பிரவீன்குமார் வீட்டை விட்டு வெளியே சென்றார் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் பதறிப்போன அவரது பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை இது குறித்து பிரவீன்குமாரின் பெற்றோர் தன் மகனை கண்டுபிடித்து தருமாறு மணவாளநகர் போலீசில் புகார் கொடுத்தனர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரவீன்குமாரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் காணாமல் போன பிரவீன்குமாரின் உடல் திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் கொப்பூர் கிராமத்தில் உள்ள முந்திரி காட்டில் கொலை செய்யப்பட்டு புதைத்து வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனைதொடர்ந்து போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொப்பூர் முந்திரி காட்டில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பிரவீன் குமார் உடலை தோண்டி எடுத்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் இது சம்பந்தமாக முருகஞ்சேரி கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் உட்பட முருகஞ்சேரி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் ( வயது 27), கொப்பூர் காலனி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த நாகரத்தினம் என்கின்ற அஜய் ( வயது 26) சாரதி( வயது 21), தமிழ் என்கின்ற தமிழ் ஒளி ( வயது 21) திருவள்ளூர் அடுத்த கோடம்பாக்கம், குச்சிக்காடு பகுதியை சேர்ந்த ரவி (வயது 26) ஆகிய ஆறு பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

முன்விரோதம் காரணமாக அடித்து கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என போலீசார் பல்வேறு கோணங்களில் மேற்கண்ட 6 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

VIDEOS

Recommended