• முகப்பு
  • குற்றம்
  • காவல் ஆய்வாளரின் கையெழுத்து மற்றும் முத்திரைகளை பயன்படுத்தி போலிச் சான்றிதழ்

காவல் ஆய்வாளரின் கையெழுத்து மற்றும் முத்திரைகளை பயன்படுத்தி போலிச் சான்றிதழ்

முகேஷ்

UPDATED: Jun 26, 2024, 6:49:52 PM

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி காவல் நிலைய ஆய்வாளரின் கையெழுத்து மற்றும் முத்திரைகளை போலியாக தயார் செய்து தொலைந்து போன சொத்து பத்திரங்களுக்கு போலியாக சான்றிதழ் கொடுத்து மோசடி செய்த சம்பவத்தில் இடைத்தரகர் மூர்த்தி என்பவர் கைது.

இந்த மோசடியில் திமுக இளைஞர் அணி நிர்வாகி ஒருவருக்கு தொடர்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த மோசடியில் தொடர்புள்ள பலரும் தலைமுறைவாகி உள்ளனர்.

இது தொடர்பாக பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த மோசடி புகாரில் தொடர்புடைய திமுக நிர்வாகியை காப்பாற்றும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

 

VIDEOS

Recommended