• முகப்பு
  • குற்றம்
  • 2 குழந்தைக்கு தாயான பெண்ணுக்காக நண்பனை எரித்து கொன்ற வாலிபர்கள்.

2 குழந்தைக்கு தாயான பெண்ணுக்காக நண்பனை எரித்து கொன்ற வாலிபர்கள்.

ரமேஷ்

UPDATED: Jun 25, 2024, 7:42:50 PM

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா சோழபுரம் அருகே அய்யாநல்லூர் பகுதியை சேர்ந்தவர் தம்பிதுரை. அ.தி.மு.க. கிளை செயலாளர். இவருடைய மகன் கோகுல்(வயது 25). பட்டதாரியான இவர் கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் மருந்தகத்தில் (மெடிக்கலில்) வேலை பார்த்து வந்தார்.

இவர் கடந்த 12-ந் தேதி இரவு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்ப வில்லை. கோகுலின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கோகுலின் பெற்றோர் மெடிக்கலுக்கு சென்று விசாரித்தனர். அங்கு அவர் ஏற்கனவே வீட்டிற்கு சென்று விட்டதாக தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ராகுலின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்காததால் கடந்த 13-ந் தேதி சோழபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் தொழில்நுட்ப உதவியுடன் செல்போன் எண்ணை கொண்டு விசாரணை நடத்தி வந்தனர். அதில் கோகுல் காணாமல் போவதற்கு முன்பு கஞ்சன் கொல்லை கிராமத்தை சேர்ந்த பிரேம்குமார் (20) மற்றும் அரியலூர் மாவட்டம், மெய்க்காவல் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ்ராஜ் (18) ஆகியோரிடம் பேசியது தெரியவந்தது.

அவர்களை தொடர்பு கொண்ட காவல்துறையினர், சென்னையில் பதுங்கியிருந்த பிரேம்குமாரையும், வீட்டில் பதுங்கி இருந்த ஆகாசையும் பிடித்து சோழபுரம் காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

விசாரணையில், கோகுலை கோவிலாச்சேரி ஊராட்சி, பழவாற்றங்கரை அருகே உள்ள சுடுகாட்டில் கழுத்தறுத்து கொலை செய்து கரையோர நாணல் புதரில் பெட்ரோல் ஊற்றி எரித்ததாக தெரிவித்தனர்.

தொடர்ந்து சுடுகாட்டிலிருந்து கோகுல் உடலை காவல்துறையினர் கைப்பற்றினர். பிரேம்குமார் மற்றும் ஆகாஷ் ராஜ் மீது கொலை வழக்குபதிவு செய்து கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். முன்னதாக பிரேம்குமார் மற்றும் ஆகாசிடம் காவல்துறையினர் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

அதில் பிரேம் குமார், கோகுல் 2 பேரும் கும்பகோணத்திற்கு பேருந்தில் சென்று வரும் போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் நண்பர்களாக மாறியுள்ளனர். இதற்கிடையே பிரேம் குமார் சமூகவலைதளத்தில் (இன்ஸ்டாகிராம்) ஈரோட்டை சேர்ந்த ஒரு பெண்ணிடம் பேசி வந்துள்ளார்.

அப்போது பிரேம்குமாருக்கும் அந்த பெண்ணுக்கும் இடைய தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை சமாதானம் செய்வதற்காக பிரேம் குமார் கோகுலின் உதவியை நாடியுள்ளார். ஆனால் கோகுல் பிரேம்குமார் பிரச்சினையை சரிசெய்யாமல் அந்த பெண்ணிடம் பேச தொடங்கியுள்ளார். இதனால் பிரேம் குமாரின் நட்பை துண்டித்த அந்த பெண் கோகுலிடம் பேசி வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அந்த பெண் மற்றும் கோகுல் பேசியது பிரேம் குமாருக்கு தெரியாது. கோகுல் கொலை செய்யப்படுவதற்கு முன்பு அவர் வேலை செய்யும் மெடிக்கலுக்கு பிரேம் குமார் சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணும் கோகுலும் வீடீயோ கால் பேசி கொண்டு இருந்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரேம்குமார் கோகுலிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார் மேலும் அந்த பெண்ணிடம் பேசுவதை நிறுத்திக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.

ஆனால் இதனை ஏற்காத கோகுல் தொடர்ந்து அந்த பெண்ணிடம் பேசியுள்ளார். இதனால் அவரை தீர்த்தகட்ட முடிவு செய்து 12-ந் தேதி இரவு கோகுலை பேச வேண்டும் பழவாற்றங்கரை அருகே உள்ள சுடுகாடு அருகே வருமாறு அழைத்துள்ளார்.

கோகுல் மட்டும் தனியாக வந்த நிலையில் பிரேம் குமார் அவரது நண்பரான ஆகாசையும் அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றியதில் பிரேம்குமார் ஆகாஷ் 2 பேரும் சேர்ந்த கோகுலை கழுத்தை நெறித்தும், கழுத்தை அறுத்தும் கொலை செய்து அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டதாக தெரிவித்தனர்.

இன்ஸ்டாகிராம் சேர்ந்த பெண் திருமணமாகி இரண்டு குழந்தைக்கு தாயாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

Recommended