• முகப்பு
  • குற்றம்
  • பெரம்பலூரில் வீட்டின் கதவை உடைத்து 4 சவரன் தங்க நகை மற்றும் ரூ.5.55 லட்சம் பணத்தை திருடிய மர்ம திருடன்கள்.

பெரம்பலூரில் வீட்டின் கதவை உடைத்து 4 சவரன் தங்க நகை மற்றும் ரூ.5.55 லட்சம் பணத்தை திருடிய மர்ம திருடன்கள்.

மாரியப்பன்

UPDATED: Jun 18, 2024, 6:47:34 AM

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பின்பகுதியில் உள்ள சித்தர் கோவில் மூன்றாவது குறுக்கு தெருவில் வசிப்பவர் ரெங்கராஜ்(40). இவர் கடந்த 10 ஆண்டுகளாக போர்வெல்ஸ் வாகனம் வைத்து, ஆழ் துளை கிணறுகள் அமைத்து தரும் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் இவரது சகோதரி புவனேஸ்வரி என்பவரின் மகன் மகாலட்சுமி என்பவருக்கு வேப்பந்தட்டையில் நடைபெறும் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று குடும்பத்துடன் ரெங்கராஜ் சென்று விட்ட நிலையில்,

மதியம் அவரது வீடு திறந்து கிடப்பதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தகவல் தெரிவித்ததையடுத்து, ரெங்கராஜ் விரைந்து வந்த  பார்த்த போது, வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த நான்கு சவரன் தங்க நகையும் ரூ.5.55 லட்சம் ரொக்கப் பணமும் திருட்டு போகிறது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து ரெங்கராஜ் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் தடயப் அறிவியல், சோதனை மற்றும் மோப்ப நாய் சோதனையும் செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர் நகரில் கடந்த சில மாதங்களாக பூட்டி இருக்கும் வீடுகளில் அடிக்கடி திருட்டுப் போகும் சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

Recommended