• முகப்பு
  • குற்றம்
  • முதல் கணவனை பார்த்து விட்டு வந்த மனைவியை மூன்றாவது கணவன் கட்டையால் அடித்து படுகொலை.

முதல் கணவனை பார்த்து விட்டு வந்த மனைவியை மூன்றாவது கணவன் கட்டையால் அடித்து படுகொலை.

ரமேஷ்

UPDATED: Sep 17, 2024, 7:25:21 PM

கும்பகோணம் மாவட்டம்

கும்பகோணத்தில் பத்தடி பாலம் கம்பர் நகரை சேர்ந்தவர் ராஜதுரை மகன் ராஜா (43). இவருக்கு திருமணமாகி இரண்டு மனைவிகள் 3 குழந்தைகள் உள்ளனர்.

சோலையப்பன் தெருவை சேர்ந்த அம்சவல்லி, திருமணம் ஆகி இரண்டு கணவர்கள் உள்ளன. முதல் கணவர் ஜாகிர் உசேனை திருமணம் செய்து கொண்டார். ஜாகிர் உசேனிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ரயிலடி அருகில் உள்ள சாலமன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

சாலமன் ரயில் பயணிகளிடம் செயின் பறிப்பு பிட்பாக்கெட் அடிப்பது உள்ளிட்ட பல்வேறு குற்ற செயலில் உள்ளார். சாலமன் மீது பல்வேறு காவல் நிலையத்தில் பல்வேறு  வழக்குகள் உள்ளது.

Latest Crime News Today 

கடந்த இரண்டு ஆண்டுகள் முன்பு ரயில் வந்த பெண்ணிடம் எட்டு சவரன் தங்க நகை கொள்ளை அடித்த வழக்கில் இரண்டு ஆண்டுகளாக சிறைச்சாலையில் உள்ளார். சாலமன் இல்லாததால் அம்சவல்லி பேருந்து நிலையம் மற்றும் மகாமகம் குளம் பகுதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். 

அப்போது ராஜாவுக்கும் அம்சவல்லிக்கும் தொடர்பு ஏற்பட்டு பத்தடி பாலம் கம்பர் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து கொடுத்து அம்சவல்லி ராஜாவும் குடும்பம் நடத்தி வந்தனர். அடிக்கடி ராஜாவும் அம்சவள்ளியும் இருவரும் சேர்ந்து சரக்கு அடிப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் சரக்கு அடிப்பதில் ஏற்பட்ட தகராறில் ராஜா அம்சவல்லி பலமாக தாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் காயம் ஏற்பட்டு பாதிப்பு அடைந்த அம்சவல்லி இனிமேல் இவனுடன் குடும்பம் நடத்த முடியாது என்று அம்சவல்லி தனது முதல் கணவரான ஜாகிர் உசேனை சந்திக்க சென்றவர் ஒரு மாதம் கழித்து கும்பகோணம் வந்தார்.

Breaking News Today in Tamil 

அப்போது ராஜா இவ்வளவு நாள் எங்கே இருந்தாய் என்று கேட்டுள்ளார். அம்சவல்லி எனது உறவினர் வீட்டில் இருந்தேன் என்று தெரிவித்தார். சந்தேகமடைந்த ராஜா உறவினர் வீட்டிற்கு தொடர்பு கொண்டு கேட்டபோது அம்சவல்லி ஒரு நாள் இருந்து விட்டு முதல் கணவர் ஜாகிர் உசேன் அழைத்துச் சென்று விட்டார். என்று அம்சவல்லி உறவினர்கள் தெரிவித்தனர். 

அப்போது ராஜாவிற்கும், அம்சவள்ளிக்கும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜா, திடீரென அம்சவள்ளியை சுவற்றில் தள்ளிவிட்டு குப்பை பெருக்கும் கட்டையால் அடித்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த அம்சவள்ளி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

Latest Kumbakonam Crime News 

தகவலயறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை ஆய்வாளர் ரமேஷ் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அம்சவள்ளி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் தலைமறைவான ராஜாவை பிடித்து கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

VIDEOS

Recommended