• முகப்பு
  • குற்றம்
  • சிவன் மற்றும் பெருமாள் கோயில் என இரண்டு கோயில்களின் பூட்டுகளை உடைத்து தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் திருட்டு.

சிவன் மற்றும் பெருமாள் கோயில் என இரண்டு கோயில்களின் பூட்டுகளை உடைத்து தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் திருட்டு.

லட்சுமி காந்த்

UPDATED: May 28, 2024, 10:44:16 AM

Crime News In Tamil

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த சிறுப்பினாயூர் ஊராட்சியில் அங்கன்வாடி தெரு அருகே பிரசன்ன வெங்கடேச பெருமாள் மற்றும் ஏகாம்பர ஈஸ்வரர் கோவில் உள்ளது.

இந்த கோவில்களில் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து அம்மன் மற்றும் பெருமாள் சிலைகளில் இருந்து சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் திருடி சென்றனர்.

Today Crime News In Tamil

மேலும், கோவில் உண்டியலில் இருந்த சுமார் நான்கு ஆயிரம் பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாலவாக்கம் போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

சாலவாக்கம் காவல்துறையினர் நீண்ட நாட்களாகவே ரோந்து போகாததால் மதுபானம், கஞ்சா, போதை பொருட்கள் , வழிப்பறி, திருட்டு, அடிதடி சண்டை போன்ற குற்ற சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது .வெளியே தெரியாத அளவுக்கு காவல்துறையினர் இதனை மூடியும் மறைத்து விடுகின்றார்கள்.

எனவே சாலவாக்கம் சுற்றிலும் உள்ள கிராமங்களுக்கு காவல்துறையினர் தொடர்ந்து ரோந்து சென்றால்தான் குற்றங்களை தடுக்க முடியும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

VIDEOS

Recommended