• முகப்பு
  • குற்றம்
  • பிறந்தநாள் கொண்டாடிய நிலையில்  விஷம் குடித்து வாலிபர் தற்கொலை.

பிறந்தநாள் கொண்டாடிய நிலையில்  விஷம் குடித்து வாலிபர் தற்கொலை.

அஜித் குமார்

UPDATED: Jul 16, 2024, 5:47:08 AM

தற்கொலை

வந்த வாசி அருகே பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் மறுநாள் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வந்தவாசி அடுத்த கொட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் நித்தியானந்தம் மகன் ஆகாஷ் (18). இவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 18வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டதாம்.

நண்பர்களுடன் கொண்டாடிய நிலையில் நேற்றுமுன்தினம் திடீரென வாயில் நுரை தள்ளிய நிலையில் வீட்டில் மயங்கி கிடந்தா ராம்.

அரசு மருத்துவமனை

பின்னர் உறவினர்கள் ஆகாஷை வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக செங் கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.

போலீசில் புகார்

சம்பவம் குறித்து நித்தியானந்தம் கீழ்கொடுங்காலூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்கு பதிவு செய்து வாலிபர் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

பிறந்தநாள் கொண்டாடிய மறுநாள் வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

VIDEOS

Recommended