Arakkonam District News - Girl Child Marriage Stopped Near Arakkonam.

பரணி

UPDATED: May 27, 2024, 10:47:44 AM

Arakkonam District News 

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அன்வர்த்திகான்பேட்டையில் உள்ள 16 வயது சிறுமி அங்குள்ள ஒரு வாலிபரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த காதல் விவகாரம் சிறுமி யின் பெற்றோருக்கு தெரிய வந்தது .

இதனால் ஆத்திரமடைந்த 16 வயது நிரம்பிய மகளுக்கு, 18 வயது மாமன்மகனை அவசர அவசரமாக திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

District News 

இந்த திருமணம் நடை பெறுவதாக இருந்த இந்நிலையில் காதலனை கைப்பிடிக்க முடியாமல் போன ஆத்திரத்தில் அந்த சிறுமி 1098 என்ற ஹெல்ப் லைன் எண்ணுக்கு போன் செய்து பெற்றோர் தனக்கு குழந்தை திருமணம் நடத்தி வைக்க உள்ளனர் என்று தகவல் தெரிவித்துள்-ளார்.

இதைத்தொடர்ந்து மாவட்ட சமூக நல அலுவலர், அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் .

அதைத் தொடர்ந்து வருவாய்த்துறையினர் உட்பட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வீட்டுக்கு சென்று சிறுமியின் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

மேலும் இரு வீட்டாரின் பெற்றோருக்கும் அறிவுரை வழங்கினர். அப்போது குறிப்பாக பெண் ணுக்கு 18 வயது நிரம்பாத நிலையில் திருமணம் செய்து வைத்தால் சட்டப் படி குற்றமாகும். பெற்றோருக்கு சிறை தண்டனை கிடைக்கும்.

அதேபோன்று ஆணுக்கு 21 வயது பூர்த்தியா-னால் மட்டுமே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினர்.

இதைத்தொடர்ந்து சிறுமியை மீட்டு வாலாஜா வில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர். இச்சம்பவம் அரக்கோணம் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

 

VIDEOS

Recommended