• முகப்பு
  • குற்றம்
  • அரசு மருத்துவமனையில் தனியார் செக்யூரிட்டி காவலர்கள் போதையில் பணி செய்வதாக புகார்

அரசு மருத்துவமனையில் தனியார் செக்யூரிட்டி காவலர்கள் போதையில் பணி செய்வதாக புகார்

முகேஷ்

UPDATED: Jul 12, 2024, 9:58:54 AM

Latest District Kanyakumari News

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் ஒப்பந்த பாதுகாப்பு நிறுவனமான கிறிஸ்டல் செக்யூரிட்டி ஊழியர்கள் போதையில் இரவு காவலர் பணியில் உள்ளனர்.. 

இவர்களால் மருத்துமனையில் இரவு நேரங்களில் தொடரும் சமுக விரோத செயல்களுக்கு இவர்களே துணை செல்லும் அவல நிலை இருக்கிறது.

மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு இவர்களால் பாதுகாப்பற்ற நிலையும் அச்சுறுத்தலும் ஏற்படும் நிலை உள்ளது. மருத்துவமனை நிர்வாகம் தொடர்ச்சியாக வேடிக்கை பார்க்கிறது

Latest Crime News

ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உறவினர்களை தரகுறைவாக ஆபாசமாக பேசுவதும்  பாலியல் தொந்தரவு கொடுப்பதும் என தொடர்ச்சியாக ஒப்பந்த கிரிஸ்டல் நிறுவன இரவு காவலர்கள் செய்து வருவதாகவும் மருத்துவமனையில் இருந்து பல புகார் சம்பந்தபட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யபட்டுள்ளன

கிறிஸ்டல் நிறுவனத்தில் பணி செய்யும் பணியாளர்கள் மீது குற்றவழக்குகள் இருக்கிறதா இல்லையா என ஆசாரிபள்ளம் மருத்துவமனை நிர்வாகம் காவல்துறை முலம் விசாரணை செய்து நடவடிக்கை எடுத்து தகுதி இல்லாத கிறிஸ்டல் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

 

VIDEOS

Recommended