சோழபுரத்தில் மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல்.

ரமேஷ்

UPDATED: Aug 14, 2024, 1:38:20 PM

கும்பகோணம் மயிலாடுதுறை 

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுக்கா கோவிலாச்சேரி பகுதியில் சோழபுரம் காவல்துறை உதவி ஆய்வாளர் சற்குணம் தலைமையிலான காவல்துறையினர் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து திருவிடைமருதூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் மூட்டைகளுடன் வந்த வாகனத்தை தடுத்தபோது, நிற்காமல் சென்றதால் காவல்துறையினர் அவரை விரட்டி பிடித்தனர்.

Latest Crime News

அவரிடம் இருந்த மூட்டைகளை சோதனை செய்த போது அதில் தமிழக அரசல் தடை செய்யப்பட்ட போதை வஸ்துகளான குட்கா, பான்பராக் இருப்பது தெரிய வந்தது. 

இதையடுத்து அவரை பிடித்து சோழபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் மயிலாடுதுறை மாவட்டம் திருவாடுதுறை கீழத்தெருவை சேர்ந்த சீமான்கான்(21) என்பதும்,

Latest District News in Tamil

வெளி மாநிலங்களில் இருந்து குட்காவை கடத்தி வந்து வீட்டில் பதுக்கி வைத்து திருவிடைமருதூர், சோழபுரம், திருப்பனந்தாள் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக எடுத்து வந்ததும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சீமான்கான் கைது செய்து அவரிடம் இருந்து 100 கிலோ குட்கா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு சுமார் 2 லட்சம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

 

VIDEOS

Recommended