• முகப்பு
  • குற்றம்
  • மதுரை சென்று காதலனை தாக்கி விட்டு உறவினர் பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து வந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி உட்பட 4பேர் கைது.

மதுரை சென்று காதலனை தாக்கி விட்டு உறவினர் பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து வந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி உட்பட 4பேர் கைது.

JK

UPDATED: Sep 19, 2024, 5:33:21 AM

திருச்சி மாவட்டம்

மணப்பாறையை அடுத்துள்ள சொரியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ். இவர் அதே பகுதியில் கல்லூரியில் படித்து வரும் திரிஷா என்பவரை கடந்த 1½ ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற நிலையில் காதலுக்கு குடும்பத்தினால் எதிர்ப்பு தெரிவிக்கவே கடந்த 14ம் தேதி வீட்டை விட்டு ஓடி மதுரை அருகே இலுப்பைக் குளத்தில் நண்பர் ஒருவரின் வீட்டில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் 16ம் தேதி பெண்ணின் உறவினரான நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும், வழக்கறிஞருமான அருணகிரி மற்றும் அவரது நண்பர்கள் சாமிக்கண்ணு, கார்த்திக், பிரவின்குமார் உள்ளிட்ட  4பேர் மதுரைக்குச் சென்று சந்தோஷை சரமாரியா தாக்கி விட்டு த்ரிஷாவை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றியுள்ளனர்.

அப்போது சாதி பெயரை சொல்லி திட்டுவிட்டு சந்தோஷிடம் இருந்த செல்போன், 20 ஆயிரம் பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து மர்ம உறுப்பு உள்ளிட்ட பகுதிகளில் தாக்கி விட்டு அவரின் தகவல் கொடுத்து விட்டு அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதில் பாதிக்கப்பட்ட சந்தோஷ் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சந்தோஷ் அளித்த புகாரின் பேரில் அருணகிரி உள்ளிட்ட 4பேரை வளநாடு காவல்துறையினர் வழக்கு பதிவு பதிந்து கைது செய்தனர். மேலும் சம்பவ குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

VIDEOS

Recommended