• முகப்பு
  • குற்றம்
  • வானகரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு பராமரிப்பு பணியில் ஈடுபட்ட இன்ஜினியர் பலி.

வானகரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு பராமரிப்பு பணியில் ஈடுபட்ட இன்ஜினியர் பலி.

ஆனந்த்

UPDATED: Aug 21, 2024, 7:08:15 PM

சென்னை

சென்னை பள்ளிக்கரணை ஐயப்பா நகரைச் சேர்ந்தவர் தினேஷ் குமார் (வயது 30) . இவர் தரமணியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சர்வீஸ் இன்ஜினியராக வேலை செய்து வந்தார்.

இவர் நேற்று தரமணியில் உள்ள நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றார். அப்போது இவரை வானகரம் அம்பத்தூர் சாலையில் அடையாளம்பட்டு ஊராட்சியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவுநீரை மறு சுழற்சி மூலம் சுத்திகரிப்பு செய்யும் பராமரிப்பு பணியை செய்ய அனுப்பி வைத்தனர்.

Latest Chennai News

தினேஷ் குமார் நேற்று அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு வந்து பராமரிப்பு பணியை முடித்து விட்டார்.ஆனால் அவர் அதே இடத்தில் மயங்கி கிடந்தார். இதை பார்த்த குடியிருப்புவாசிகள் உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில் இரவு தினேஷ் இறந்து போனார். 

Latest District News in Tamil 

இதுபற்றி தகவலறிந்த மதுரவாயல் போலீசார் தனியார் மருத்துவமனைக்கு சென்று தினேஷ் குமார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுபற்றி மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து விஷ வாயு தாக்கி இறந்து போனாரா அல்லது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் அடுக்குமாடி குடியிருப்பில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

 

VIDEOS

Recommended