• முகப்பு
  • குற்றம்
  • ஏடிஎம்மில் முதியவரின் கவனம் சிதறும் பொழுது பணத்தை திருடிய நபர்

ஏடிஎம்மில் முதியவரின் கவனம் சிதறும் பொழுது பணத்தை திருடிய நபர்

ரமேஷ்

UPDATED: Aug 8, 2024, 5:09:40 AM

கும்பகோணம்

தாலுகா சுவாமிமலை அருகே மாங்குடி கிராமம் பாரதி நகர் பகுதியில் வசித்து வருபவர் ரமணி. இவர் செங்கல்பட்டு அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார். தனது மனைவி மகன்கள் அனைவரும் இவரை கைவிட்டு விட்டனர். 

இந்த நிலை கும்பகோணத்தில் உள்ள ஒரு முதியோர் காப்பகத்தில் வசித்து வருகிறார். இவருக்கு தனியார் நிறுவனம் சார்பில் மாத தோறும் ஓய்வு தொகை வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

Latest Crime News

இந்நிலையில் மடத்து தெருவில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம்மில் தனது உதவி தொகையை எடுக்க சென்றார். அங்கே ஏடிஎம்மில் கோளாறு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் மற்றொரு ஏ டி எம் க்கு சென்று பணம் எடுத்த போது வங்கி கணக்கில் பணம் இல்லை என்று ஏடிஎம் எந்திரத்தின் டிஸ்ப்ளேயில் வந்தது.

இதனால் அதிர்ந்த அவர் வங்கி கணக்கை சோதனை பார்த்தபோது ஏற்கனவே பணம் எடுத்திருந்தது தெரிய வந்தது. உடனே அவர் வங்கிக்கு சென்று இதுகுறித்து விளக்கம் கேட்டுள்ளார்.

ATM Machine

அப்போது ஏடிஎம் அறையில் உள்ள கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை வங்கி அதிகாரிகள் சோதனை செய்த போது, அதில் ரமணி மடத்து தெருவில் பணம் எடுக்கும் பொழுது அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நான் கவனிக்காத நேரத்தில் பணத்தை எடுத்துவிட்டு அங்கிருந்து சென்றது தெரிய வந்தது. 

இதுகுறித்து ரமணி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ரமணியிடமிருந்து திருடு போன பணம் ரூ. 12, 000 எடுத்துச் சென்ற நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

VIDEOS

Recommended