• முகப்பு
  • குற்றம்
  • வாலாஜா அருகே குழந்தை திருமணம் தடுப்பு சமூக நலத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை.

வாலாஜா அருகே குழந்தை திருமணம் தடுப்பு சமூக நலத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை.

பரணி

UPDATED: May 20, 2024, 1:04:57 PM

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த கல்மேல்குப்பத்தைச் சேர்ந்த 17வயது சிறுமிக்கு உறவினருடன் திருமணம் செய்ய அருகிலுள்ள வன்னிவேடு பகுதியில் இரகசிய ஏற்பாடுகளை அவரது பெற்றோர் செய்து வருவதாக கிடைத்த தக-வலின் பேரில்

அங்கு விரைந்த சமூக நலத்துறை அதிகாரிகள், வாலாஜா வட்டாட்சியர் வெங்கடேசன் திருமணத்தை தடுத்து நிறுத்தி சிறுமியை மீட்டு வாலாஜாவிலுள்ள குழந் தைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக சமூக பாதுகாப்பு மற்றும் மகளிர் நலதுறையினர் விசாரணை செய்து வரு கின்றனர்.

இதற்கிடையே 17 வயது சிறுமிக்கு அவரது பெற்றோர் இரகசிய திருமணம் செய்து வைக்க முயன்று தடுத்து நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது.

 

VIDEOS

Recommended