• முகப்பு
  • குற்றம்
  • திருவேற்காட்டில் வீட்டில் பூட்டை உடைத்து 100 சவரன் நகை, ரூ.50 ஆயிரம் கொள்ளை

திருவேற்காட்டில் வீட்டில் பூட்டை உடைத்து 100 சவரன் நகை, ரூ.50 ஆயிரம் கொள்ளை

S.முருகன்

UPDATED: Jul 29, 2024, 9:50:40 AM

Latest Chennai District News

திருவேற்காடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளையடித்த கொள்ளையர்களை போலீசார் தொலைபேசி தேடி வருகின்றனர்.

சென்னையை அடுத்த திருவேற்காடு அயனம்பாக்கம், ஈஜிபி நகரை சேர்ந்தவர் ஜனார்த்தனன்(45). இவர் வெளிநாட்டில் கட்டுமான நிறுவனத்தில் எஞ்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கோகிலா (40). இவர்களுக்கு பவதாரணி என்ற ஒரு மகள் உள்ளார். ஜனார்த்தனன் கடந்த மாதம்தான் வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பியுள்ளார். 

Chennai Crime News

இந்த நிலையில் நேற்று மாலை குடும்பத்துடன் சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலுக்கு ஷாப்பிங் செய்வதற்காக சென்று உள்ளனர்.

பின்னர் இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 100 சவரன் நகை, ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

Tamil Nadu Crime News 

இது குறித்து திருவேற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் திருவேற்காடு போலீசார் கொள்ளை சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் தடயவியல் நிபுணர்கள் கொள்ளை நடந்த வீட்டிற்கு வந்து அங்கு பதிவாகி இருந்த ரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர்.

Crime News

இது குறித்து திருவேற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

 

VIDEOS

Recommended