வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகைகள் திருட்டு.

JK

UPDATED: Jul 16, 2024, 5:03:53 AM

திருச்சி மாவட்டம், முசிறி அழகாபட்டி ரோடு திருமுருகன் நகர் பகுதியில் ஆனந்தன் நகரில் வசித்து வருபவர் கிருஷ்ணவேணி(45). இவரது கணவர் ஆனந்தராஜ் சென்னையில் பிளம்பராக வேலை செய்து வருகிறார்.

கிருஷ்ணவேணி நேற்று காலையில் சுமார் பத்து மணி அளவில் தனது வீட்டை பூட்டி விட்டு சேருகுடியில் உள்ள தனது தாயார் கலாவதி வீட்டுக்கு சென்றுள்ளார்.

மாலையில் தனது வீட்டை வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் உள்ளே உள்ள இரண்டு பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த தாலிக்கொடி, ஆரம், நெக்லஸ், மோதிரம், செயின் உள்ளிட்ட 25 பவுன் நகைகள் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து முசிறி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் கைரேகை நிபுணர்களான உதவி ஆய்வாளர்கள் அகில் மற்றும் சுஜித் ஆகியோர் அடையாளங்களை சேகரித்தனர்.

மேலும், மோப்பநாய் காவேரி வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் சென்று நின்றது.சம்பவம் குறித்து முசிறி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருடு போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

VIDEOS

Recommended