உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

ராமு தனராஜா

UPDATED: Aug 20, 2024, 7:16:22 AM

கந்தேகெதர புஸ்ஸல்லாவ பகுதியில் உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் நேற்று (19) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் 

புஸ்ஸல்லாவ வத்த கந்தேகெதர பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் 

 பசறை ஆக்கரத்தன்ன பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதியில் சுற்றி வளைத்து தேடுதல் மேற்கொண்ட போது மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பக்கியை கைப்பற்றியதாகவும் அத்தோடு மேல் குறிப்பிட்ட சந்தேக நபரை கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்கள்.

சந்தேக நபரையும் துப்பாக்கியையும் விசேட அதிரடிப் படையினர் கந்தேகெதர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கந்தேகெதர பொலிஸார் தெரிவித்தனர்.

 

VIDEOS

Recommended