• முகப்பு
  • குற்றம்
  • சாவில் சந்தேகம் என மனைவி புகார்  சென்ட்ரிங் தொழிலாளி உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை.

சாவில் சந்தேகம் என மனைவி புகார்  சென்ட்ரிங் தொழிலாளி உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை.

அஜித் குமார்

UPDATED: Jul 15, 2024, 7:13:16 PM

Tamil Nadu Crime News 

தண்டராம்பட்டு அருகே சாவில் சந்தேகம் என மனைவி அளித்த புகாரை அடுத்து சென்ட்ரிங் தொழிவாளி உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோ தனை செய்யப்பட்டது. 

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம் பட்டு அடுத்த பி.குயிலம் ஊராட்சிக்கு உட்பட்ட நாவகொல்லை பகுதியைச் சேர்ந்த சென்ட்ரிங் கூலித் தொழிலாளி சந்திர சேகர் (36) இவர் கடந்த 10ம் தேதி அதே பகுதியில் முருகன் என்பவர் கட்டி வரும் வீட்டுக்கு கம்பி கட்டும் வேலைக்கு சென்றார். 

வேலையை முடித்துவிட்டு முருகன், சந்திரசேகர் அவருடைய நண்பர்கள் குப்பன், கணேசன் செல்வன் ஆகிய ஐந்து பேரும் சேராப்பட்டு செல்லும் சாலையில் உள்ள நெற்களத்தில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர்.

Latest Tiruvannamalai District News 

பின்னர், அவரவர் வந்த இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து விட்டனர். முருகன், சந்திரசேகர் வரவில்லையா என்று வீட்டில் உள்ள இளவரசியிடம் கேட்டதற்கு இன்னும் வரவில்லை என்று கூறியதாக  கூறப்படுகிறது.

தொடர்ந்து, முருகன் அமர்ந்து மது அருந்திய இடத்திற்கு சென்று பார்த்த போது சிறிது தூரத்தில் சந்திரசேகர் இருசக்கர வாக னத்தில் இறந்து கிடந்தார்.

உடனடியாக அருகில் உள்ளவர்களின் உதவியோடு சந்திரசேகர் உடலை மீட்டு கடந்த 13 ம் தேதி அதே பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

Crime News Updates 

இதுகுறித்து, சந்திரசேகர மனைவி இளவரசி தனது கணவர் சாவில் சந் தேகம் உள்ளது என்று 14ம் தேதி தானிப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அதன் அடிப்படை யில் வழக்கு பதிவு செய்த போலீசார் சந்திரசேகர் உடலை தோண்டி எடுக்க முடிவு செய்தனர்.

News

அதன் படி சந்திரசேகர் உடலை நேற்று தாசில்தார் நடராஜன், டி எஸ்பி முருகன் இன்ஸ்பெக்டர் செல்வதாய் வருவாய் ஆய்வாளர் வரதராஜிலு கிராம நிர்வாக அலுவலர் ராமன் ஆகியோர் முன்னிலையில் தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்விற்காக சில பாகங்களை டாக்டர்கள் எடுத்து சென்றனர். 

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

VIDEOS

Recommended