• முகப்பு
  • குற்றம்
  • நடிகை கவுதமியின் நில மோசடி வழக்கு பைனான்சியருக்கு ராமநாதபுரம் கோர்ட்டில் ஜாமீன்.

நடிகை கவுதமியின் நில மோசடி வழக்கு பைனான்சியருக்கு ராமநாதபுரம் கோர்ட்டில் ஜாமீன்.

கார்மேகம்

UPDATED: Oct 5, 2024, 8:37:58 AM

இராமநாதபுரம்

நடிகை கவுதமி தனது உதவியாளரான பைனான்சியர் அழகப்பன் என்பவர் மீது அளித்த தகவலின் பேரில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் கண்டிலான் பகுதி தூலுக்கன் குறிச்சியில் 150 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு வரவுள்ளதாக தெரிவித்து ரூ.3 கோடியே 16 லட்சம் வாங்கி கொண்டு ஏமாற்றினாராம் இது தொடர்பாக கவுதமி அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் நில மோசடி தடுப்பு பிரிவு போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து அழகப்பனை கைது செய்தனர்.

நடிகை கவுதமி 

இதன் பின்னர் கோர்ட்டு அனுமதியுடன்  அவரை ராமநாதபுரம் போலீஸ் சார் காவலில் எடுத்து விசாரித்தனர் பின்னர் அவர் மீண்டும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார் முன்னதாக அழகப்பன் ராமநாதபுரம் கோர்ட்டில் கடந்த ஆகஸ்டு மாதம் ஜாமீன் வழங்க கோரி மனுத்தாக்கல் செய்திருந்த போது நடிகை கவுதமி அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என நேரில் ஆஜராகி மனுத்தாக்கல் செய்தார்.

Latest Crime News Today In Tamil 

அதனை விசாரித்த நீதிபதி அழகப்பனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்திருந்தனர் இந்த நிலையில் சினிமா பைனான்சியர் அழகப்பன் தரப்பில் மீண்டும் ஜாமீன் கோரி ராமநாதபுரம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்

அவரின் மனுவை விசாரித்த நீதிபதி பிரபாகரன் சினிமா பைனான்சியர் அழகப்பனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார் அழகப்பன் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நடிகை கவுதமியிடம் மோசடி செய்ததாக வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

VIDEOS

Recommended