• முகப்பு
  • குற்றம்
  • விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி குடோன்களில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்ட சுமார் 1 டன் பட்டாசு வெடி மருந்துகள்

விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி குடோன்களில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்ட சுமார் 1 டன் பட்டாசு வெடி மருந்துகள்

அந்தோணி ராஜ்

UPDATED: Aug 23, 2024, 4:43:27 PM

சிவகாசி 

சிவகாசி பகுதியில் வருவாய் துறை, மற்றும் காவல்துறையினர் கடந்த மாதம் மேற்கொண்ட ஆய்வின் போது திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி தலித் ராஜா மற்றும் பால்பாண்டி ஆகியோரின் குடோன்களில் முன் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்ட சுமார் 1 டன் பட்டாசு வெடி மருந்துகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இவற்றை நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று மதுரையிலிருந்து வந்த வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் குழுவினர் செங்கமலப்பட்டி கண்மாய் பகுதியில் வைத்து பட்டாசுகளை குழியில் போட்டு தண்ணீர் ஊற்றியும் இரசாயன வெடி மருந்துகளை தீ வைத்தும் அழித்தனர்.

 

VIDEOS

Recommended