• முகப்பு
  • குற்றம்
  • மனைவியை பற்றி தவறாக பேசுவாயா கொலை செய்து விடுவேன் என்று கொலை வெறி தாக்குதல் நடத்திய வாலிபர்

மனைவியை பற்றி தவறாக பேசுவாயா கொலை செய்து விடுவேன் என்று கொலை வெறி தாக்குதல் நடத்திய வாலிபர்

சுரேஷ்பாபு

UPDATED: May 9, 2024, 6:10:25 AM

Today Tiruvallur District News 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலுக்கு சொந்தமான கன்னி கோயில் உள்ளது அதன் பின்புறம் மது போதையில் வாலிபர் ஒருவர் மற்றொரு வாலிபரை கத்தியால் வெட்டிவிட்டு ரத்த கத்தியுடன் இந்திரா நகர் பகுதியில் வந்துள்ளார் 

அப்போது அந்தப் பகுதியில் ரோந்து பணியில் இருந்த திருத்தணி காவல் நிலைய ஆய்வாளர் மதி அரசன் ரத்தக் கத்தியுடன் வந்த வாலிபரை மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் அந்த வாலிபர் கொடுத்த தகவல் போலீஸ் தரப்பில் கூறப்படுவது

Tiruvallur District Crime News

ரத்தக் கத்தியுடன் வந்த வாலிபர் பெயர் பிரகாஷ் இவர் திருத்தணி இந்திரா நகர் பகுதியில் வசித்து வருகிறார் இவர் முதல் மனைவி இவரை விட்டு சென்றவுடன் இவர் இரண்டாவதாக மற்றொரு மனைவியை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வருகிறார்

அவரது பெயர் சுதா பிரகாசம் இரு தினங்களுக்கு முன்பு திருத்தணி இரண்டாவது ரயில்வே கேட் பகுதியில் நடந்து செல்லும் பொழுது

பிரகாஷின் நண்பர் திருத்தணி முருகன் கோயிலில் வேலை செய்யும் அருண் என்பவர் இரு சக்கர வாகனத்தில் அவரது மனைவியை அழைத்துச் சென்றுள்ளார்

இருசக்கர வாகனத்தை நிறுத்தி  அப்பொழுது பிரகாஷின் மனைவியை பார்த்து தவறான வார்த்தையில் அருண் பேசியதாக இதனால் ஆத்திரத்தில் இருந்த பிரகாஷ் சில நாட்களுக்குப் பிறகு அருண் அவரது நண்பரை அழைத்து மது அருந்தலாம் உனது மனைவியை யார் உடன் கள்ளத்தொடர்பில் இருக்கிறார்கள் என்று கூறுகிறேன் என்று அழைத்துள்ளார்  பிரகாஷ் 

இதனை அடுத்து முருகன் கோயிலில் மலைக்கோயில் பூ மாலை கட்டும் தொழில் செய்து வரும் அருண் அந்த வேலையை விட்டுவிட்டு பிரகாஷ் அழைத்த இடத்திற்கு கன்னி கோயில் பின்புறம் சென்றுள்ளார்

Crime News & Updates

அங்கு மது போதையில் இருந்த பிரகாஷ் வந்தவுடன் எனது மனைவியை பற்றி தவறாக பேசுகிறாய் இது சரி இல்லை என்று வாக்குவாதத்தில் இருவருக்கும் ஈடுபட்டு எனது மனைவி கூட யாருடனும் கள்ள தொடர்பில் இருக்கிறார் என்று நீ கூறினாயே என்று அருண் பிரகாஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில்

பிரகாஷ் மீன் வெட்டும் பட்டாக்கத்தியை மறைத்து வைத்ததை எடுத்து வந்து அருண் மண்டையில் ஓங்கி வெட்டி உள்ளார் 

எனது மனைவியை பற்றி தவறாக பேசினால் உன்னை கொன்று விடுவேன் என்று கூறிவிட்டு வெட்டிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார் அவனை அப்போதுதான் போலீசார் மடக்கி பிடித்ததாக தெரிவித்துள்ளனர்.

Today Crime News & Updates

இதனை அடுத்து பிரகாஷ் மீது அருண் வாலிபரை கொலை முயற்சியுடன் தாக்கி கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிய குற்றத்திற்காக பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து பிரகாஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்

படுகாயம் அடைந்த அருண் திருத்தணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தலையில் பலத்த வெட்டு காயம் என்பதால் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு திருத்தணி மருத்துவர்கள் அருண் வாலிபரை மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

 

VIDEOS

Recommended