• முகப்பு
  • குற்றம்
  • 360 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 200 போதை மாத்திரைகளை விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவர் கைது

360 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 200 போதை மாத்திரைகளை விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவர் கைது

ராமு தனராஜா

UPDATED: May 26, 2024, 6:06:11 AM

மஹியங்கனை, தொடம்வத்த பகுதியில் 360 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 200 போதை மாத்திரைகளை விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளார்.

 கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மஹியங்கனை தொடம்வத்த பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

 சந்தேகநபர் போதைப்பொருள் மற்றும் மாத்திரைகளை தம் கைவசம் வைத்திருந்ததாகவும் மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகாமையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸ் முகவரை நியமித்து ஐஸ் போதைப்பொருள் கொள்வனவு செய்யும் போர்வையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 பதுளை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் உபுல் சந்தன, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த, உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.டபிள்யூ.எஸ்.பலிபான மற்றும் மஹியங்கனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரபோபா டபிள்யூ.டபிள்யூ.எம்.விஜேரத்ன, போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி போசா ஜயசேகர (8616024) ), போகோ பிரேமரத்ன 81362, போகோ பிரேமலால் (83365) மற்றும் போகோ குலவன்ச (104381) ஆகியோர் குறித்த சுற்றி வளைப்பை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இந்த போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டாரா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

VIDEOS

Recommended