• முகப்பு
  • குற்றம்
  • சுங்குவார்சத்திரம் அருகே 450 கிராம் கஞ்சா உள்ளிட்ட 124 கிலோ போதை வஸ்துகளை வீட்டில் பதுக்கி விற்பனை செய்த 54 வயதுடைய நபர்.

சுங்குவார்சத்திரம் அருகே 450 கிராம் கஞ்சா உள்ளிட்ட 124 கிலோ போதை வஸ்துகளை வீட்டில் பதுக்கி விற்பனை செய்த 54 வயதுடைய நபர்.

லட்சுமி காந்த்

UPDATED: Oct 25, 2024, 6:20:14 PM

காஞ்சிபுரம் மாவட்டம்

சுங்குவார்சத்திரம் காவல் எல்லைக்கு உட்பட்ட பல பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் அமோக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகள் தொடர்ந்து விற்பனை செய்யப்படுவது தொடர் கதையாக உள்ளது.

கஞ்சா

அதனைத் தொடர்ந்து சுங்குவார்சத்திரம் அடுத்துள்ள முளச்சூர் பகுதியில் பள்ளி அருகே போதைப் பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த மொத்த வியாபாரி குமார் (வயது 54) என்பவரிடமிருந்து 450 கிராம் கஞ்சா மற்றும் ஹான்ஸ் 45.50 கிலோ கிராம் , சுவாகத் பாக்குகள் 60 கிலோ, கூல்லிப் 18. 80 கிலோ கிராம் என மொத்தம் 124.30 கிலோ கிராம் போதை வஸ்துகள் மற்றும் அவர் பயன்படுத்தி வந்த இருசக்கர வாகனம் ஒன்று ஆகியவை கைப்பற்றப்பட்டு மொத்த வியாபாரி குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

காவல்துறை

சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பல பகுதிகளில் போதை வஸ்த்துக்களும் கஞ்சாவும் அதிக விற்பனை செய்து வருவதற்கு முக்கிய காரணம் சில காவல்துறையினர் கையூட்டு பெற்றுக்கொண்டு வியாபாரிகளை ஊக்குவிப்பது தான் என சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

 

VIDEOS

Recommended