• முகப்பு
  • குற்றம்
  • கும்மிடிப்பூண்டி அருகே மாதர்பாக்கத்தில் 30 வயதுள்ள பெண்ணின் உடல் ஆடைகள் இன்றி சடலமாக மீட்பு.

கும்மிடிப்பூண்டி அருகே மாதர்பாக்கத்தில் 30 வயதுள்ள பெண்ணின் உடல் ஆடைகள் இன்றி சடலமாக மீட்பு.

L.குமார்

UPDATED: May 9, 2024, 8:05:43 PM

கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள பாதிரிவேடு காவல் நிலையம் அருகே சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் ஒன்று ஆடைகள் இன்றி உடலின் பல இடங்களில் ரத்த காயங்களுடன் கிடப்பதாக பாதிரிவேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

உடலின் முகம் காது பல இடங்களில் ரத்த காயங்கள் உள்ளதாலும் உடல் முழுவதும் ஆடை இல்லாமல் இருப்பதாலும் இறந்து கிடக்கும் பெண் உல்லாசத்திற்காக அழைத்து வரப்பட்டு பின் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

VIDEOS

Recommended