• முகப்பு
  • குற்றம்
  • கள்ளக்காதலனுடன் இணைந்து தாய் தனது மகனை கொலை செய்ய முயற்சி 17 வயது சிறுவன் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சிறுவன் வேதனை

கள்ளக்காதலனுடன் இணைந்து தாய் தனது மகனை கொலை செய்ய முயற்சி 17 வயது சிறுவன் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சிறுவன் வேதனை

சுரேஷ் பாபு

UPDATED: Jul 17, 2024, 6:52:12 PM

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகில் உள்ளது ஆசிரியர் நகர் இந்த பகுதியில் வசிப்பவர் பூர்ணிமா (34) இவரது கணவர் மோகன் முரளி-(40) டி.வி மெக்கானிக்காக இருந்தார் 

இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு இவர் இருசக்கர வாகன விபத்தில் ஆந்திர மாநிலத்தில் உயிரிழந்தார் 

இவர்களுக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். 

இந்த நிலையில் மோகன் முரளி இறந்த பிறகு சில மாதங்களில் பூர்ணிமா வீட்டில் இருக்கும் பொழுது ஒரு ஆண் ஒருவர் வந்து செல்வதாக அவர் ஏன்? வருகிறார் என்று பூர்ணிமாவின் மகன் லியோ வயது (17) இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ம் வகுப்பு படிக்கிறார் 

இந்த மாணவன் தனது தாயிடம் ஆக்ரோஷமாக கேட்டுள்ளார் இதில் தாய் பூர்ணிமா மாணவனை கை கால்களில் வடை சுடும் கம்பியால் மாணவன் லியோவின் கையை கள்ளக்காதலன் ஸ்ரீதர் பிடித்துக் கொண்டு பூர்ணிமாவின் மகள் மூத்த மகள் ஹணி ஆகியோர்கள் பிடித்துக் கொண்டு மாணவன் லியோவுக்கு சூடு வைத்து உள்ளனர் ஒழுங்காக இருந்து கொள் கேள்வி? கேட்காதே என்று மிரட்டி உள்ளார் 

இதனைத் தொடர்ந்தும் பூர்ணிமாவின் கள்ளக்காதலன் இரவு நேரத்திலும் வந்துள்ளார் இதனால் ஆத்திரம் அடைந்த மாணவன் லியோ தனது தாயிடம் ஆக்ரோஷமான முறையில் சண்டையிட்டுள்ளார் 

இதனால் கோதிப்படைந்த பூர்ணிமா கள்ளக்காதலன் திருத்தணி பூங்கா நகரைச் சேர்ந்த டிரைவர் பணி செய்யும் ஸ்ரீதர் இவர்கள் திட்டம் தீட்டி மாணவன் லியோவை கொலை செய்து விடலாம் என்று திட்டம் தீட்டியுள்ளனர்

மேலும் பூர்ணிமாவின் கணவர் இறந்த பிறகு விபத்திற்கான இன்சூரன்ஸ் பணம் 4 லட்சம் மாணவன் லியோவிடம் இருப்பதாக கூறப்படுகிறது 

இந்த பணத்தையும் அபகரிக்க இந்த கள்ளக்காதல் ஜோடி மாணவன் லியோவை வீட்டில் வைத்து கழுத்தை நெரிப்பது துணியால் கழுத்தை இறுக்கி பிடிப்பது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர் 

ஒரு கட்டத்தில் பூர்ணிமா கள்ளக்காதலன் ஸ்ரீதரனிடம் லியோவை கொன்றுவிடு அவனிடம் இருக்கும் 4 லட்சம் பணத்தை வைத்து உன்னை நான் ஜாமினில் எடுத்து விடுகிறேன் என்றும் கூறியுள்ளார்

இதனால் மன வேதனையில் இருந்த மாணவனை ஒருநாள் இரவு பயங்கரமாக தாக்கி கொலை செய்யும் முயற்சியுடன் வீட்டில் வைத்து பூட்டி உள்ளனர் 

ஆனால் மாணவன் லியோ அங்கிருந்து தப்பித்து வீட்டிலிருந்து வெளியேறி  இவர்கள் வீட்டில் எதிர் தெருவில் உள்ள லியோவின் அப்பா மோகன் முரளி அவரது தந்தை ஆறுமுகம் முன்னாள் ராணுவ வீரர் இவர் வீட்டுக்கு லியோ சென்றுள்ளார் 

நடந்தவற்றை அனைத்தையும் தனது தாத்தாவிடம் அவர் தெரிவித்துள்ளார் 

இதனைத் தொடர்ந்து திருத்தணி காவல் நிலையத்தில் மாணவன் லியோ புகார் அளித்துள்ளார் அதில் தனது தாய் பூர்ணிமா கள்ளக்காதலன் ஸ்ரீதர் தனது சகோதரி ஹணி இவர்கள் அனைவர் மீதும் புகாராக நடந்தவற்றை அனைத்தையும் புகாராக தெரிவித்துள்ளார் .

ஆனால் அதன் பிறகும் தனது பெற்ற தாய் பூர்ணிமா கொலை செய்யும் முயற்சியில் இறங்கி விடுவார் என்று அச்சத்தில் இருந்துள்ளார் 

ஆனால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் நடந்துவற்றை அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய லியோவின் தாத்தா ஆறுமுகம்(76) தெரிவிக்கையில்

நான் முன்னாள் ராணுவ வீரர் ஆவேன் எனது மகன் மோகன் முரளி இறந்த பிறகு நாங்கள் இருந்த அந்த வீட்டை எனது மருமகள் பூர்ணிமாய் இருக்கட்டும் என்று இருந்தோம் ஆனால் அவர் கள்ளக்காதலுடன் இணைந்து எனது 50 லட்சம் ரூபாய் வீட்டையும் அபகரித்துக் கொண்டார் 

தற்போது எனது பேரன் லியோவையும் கொலை செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார்

நாங்கள் வயதானவர்கள் எங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கிறது திருத்தணி காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை உடனடியாக தமிழக காவல்துறை தலைவர் காப்பாற்ற வேண்டும் என்று இரு கரம் கூப்பி மனம் நொடிந்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

 

VIDEOS

Recommended