• முகப்பு
  • குற்றம்
  • திருவேற்காட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு.

திருவேற்காட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு.

S.முருகன்

UPDATED: Jun 29, 2024, 5:33:30 AM

திருவேற்காடு அடுத்த வீரராகவபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவி(59), இவரது மனைவி அம்சா(55), சென்னீர்குப்பம் - ஆவடி சாலையில், காடுவெட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரி அருகே மாம்பழம் விற்பனை செய்து வருகிறார்.

இந்தநிலையில் வழக்கம்போல் நேற்று முன் தினம் இரவு வியாபாரம் முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் அம்சாவின் அருகில் சென்று அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தாலி சங்கலியை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

அதனால் அதிர்ச்சி அடைந்த அம்சா திருவேற்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த திருவேற்காடு போலீசார் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

VIDEOS

Recommended