ராணுவ அதிகாரி வீட்டில் 30 சவரன் தங்க நகைகள் கொள்ளை.

ரமேஷ்

UPDATED: Jun 3, 2024, 6:38:22 PM

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா நாச்சியார் கோவில் அடுத்த முத்துப்பிள்ளை மண்டபம் பிரசாந்தி நகரில் வசித்து வரும் மரிய ஜெகநாதன் மகன் மரிய கிரகோரி, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி தற்போது ரயில் நிலையம் அருகில் டியூசன் சென்டர் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் வேலூரில் உள்ள எனது மகள் வீட்டிற்கு மரிய கிரகோரி, குடும்பத்துடன் காரில் சென்றார். இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மீட்டிங் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 30 சவரன் தங்க நகை 2 லட்சத்து 70 ஆயிரம் நோக்கம் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது,

தகவலறிந்த நாச்சியார் கோவில் காவல்துறை ஆய்வாளர் சுகுணா, மற்றும் உதவி ஆய்வாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தினர். வீட்டில் இருந்த கேமராவின் ஸ்டோரேஜ் டிஸ்க் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றனர்.

தொடர்ந்து தஞ்சையில் இருந்து தடைவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் சோழன், வரவழைக்கப்பட்டு தடயங்களை கைப்பற்றினார். மோப்ப நாய் சோழன் வீட்டில் இருந்து மெயின் ரோடு அருகில் உள்ள குளம் வரை சென்றது.வந்து இச்சம்பவம் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

VIDEOS

Recommended