• முகப்பு
  • குற்றம்
  • காரைக்காலில் இருந்து லோடு வேனில் அண்டர்ஜேஸ்சில் பெட்டிகளை அடுக்கி நூதன முறையில் 1263 மது பாட்டில்கள் கடத்தல்

காரைக்காலில் இருந்து லோடு வேனில் அண்டர்ஜேஸ்சில் பெட்டிகளை அடுக்கி நூதன முறையில் 1263 மது பாட்டில்கள் கடத்தல்

செ.சீனிவாசன்

UPDATED: Apr 15, 2024, 5:15:05 AM

நாகை மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு ஹர்சிங் உத்தரவின் பேரில், சாராய கடத்தலை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போலீஸ்சார் சோதனை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் நாகூர் கிழக்கு கடற்கரை சாலையில் தனிப்படை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீஸ்சார் வாகன சோதனையில் ஈடுப்பட்ட கொண்டு இருந்த போது

அப்போது காரைக்கால் இருந்து நாகையை நோக்கி வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி போலீஸ்சார் சோதனை செய்ததில் அதில் மது பானம் பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

விசாரணையில் விழுந்தமாவடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கண்ணையன் மகன்மணிவாசகம் (வயது29) என்பது தெரியவந்தது.



இது குறித்து வழக்கு பதிவு செய்த நாகூர் போலீசார் அவரிடம் இருந்து 180 மில்லி அளவு கொண்ட மதுபானம் 384 பாட்டில்களும், 90 மில்லி அளவு கொண்ட 864 பாட்டில்களும், 750 மில்லி அளவு கொண்ட 15 மதுபான பாட்டில்களையும்

காரைக்காலில் இருந்து காரில் அண்டர்ஜேஸ்சில் பெட்டிகளை அடுக்கி நூதன முறையில் 1263 மதுகள் கடத்தலுக்கு பயன்படுத்திய நான்கு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து மணிவாசகத்தை போலீசார் கைது செய்தனர்.

VIDEOS

Recommended