• முகப்பு
  • உலகம்
  • இஸ்ரேலின் வான் தாக்குதலில் அல்ஜெசீரா ஊடகவியலாளர் இருவர் மரணம்

இஸ்ரேலின் வான் தாக்குதலில் அல்ஜெசீரா ஊடகவியலாளர் இருவர் மரணம்

Irshad Rahumathulla

UPDATED: Aug 1, 2024, 3:36:25 PM

அல் ஜசீரா பத்திரிகையாளர் இஸ்மாயில் அல்-கோல் மற்றும் ஒளிப்பதிவாளர் ரமி அல்-ரிஃபி ஆகியோர் காசா பகுதியில் புதன்கிழமை மாலை நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

காசாவில் உள்ள உள்ளூர் செய்தியாளர்கள் இரண்டு வான்வழித் தாக்குதல்கள் விரைவாகத் தரையிறங்கியதாகக் கூறினார்.  

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் காசா வீட்டிற்கு அருகில், ஹனியே புதன்கிழமை அதிகாலை தெஹ்ரானில் கொல்லப்பட்டதை அடுத்து மக்கள் கூடியிருந்த இடத்தில் முதலாவது தாக்குதல் நடத்தப்பட்டது.

ஷாதி அகதிகள் முகாமில் காசா நகருக்கு மேற்கே அமைந்துள்ள வீட்டிற்கு மாலை 4 மணியளவில் பல செய்திக் குழுவினர் மற்றும் சுயாதீன புகைப்படக் கலைஞர்கள் சென்றனர்.

இதன் போதே இந்த வான் வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

VIDEOS

Recommended