• முகப்பு
  • உலகம்
  • ஈரான் ஜனாதிபதி ரைசிக்காக பிரார்த்தனை செய்யுமாறு கோரிக்கை - பாதுகாப்பு கவுன்சில் அவசரமாக கூடியது

ஈரான் ஜனாதிபதி ரைசிக்காக பிரார்த்தனை செய்யுமாறு கோரிக்கை - பாதுகாப்பு கவுன்சில் அவசரமாக கூடியது

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: May 19, 2024, 4:15:26 PM

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதை அடுத்து ஈரான் பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்திற்கு ஈரான் ஆன்மீக தலைவர் அயதுல்லா அலி கமேனி அழைப்பு விடுத்துள்ளார்.  

ஈரானிய ஊடகங்கள் இந்த செய்தியினை வெளியிட்டுள்ளன.

 ஈரானிய ஜனாதிபதியின் உடல்நிலை குறித்து ஈரானிய அதிகாரிகளிடம் இதுவரை எந்த தகவலும் இல்லை இப்ராஹிம் ரைசி, அவர் பயணம் செய்த ஹெலிகாப்டர் நாட்டின் வடமேற்கில் "கடினமான தரையிறக்கத்திற்கு" ஆளானதால், மோசமான வானிலை காரணமாக தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டது. உள்ளூர் ஊடகங்கள் மேற்கோள் காட்டிய ஈரானிய உள்துறை அமைச்சர் அஹ்மத் வஹிதி இதை உறுதிப்படுத்தினார். 

அடர்ந்த பனிமூட்டம் காரணமாக மீட்பு ஹெலிகாப்டர்கள் விபத்து நடந்த இடத்தில் தரையிறங்க முடியவில்லை என்று IRNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. "இர்னா" படி, வெளியுறவு அமைச்சரும் ஹெலிகாப்டரில் இருந்தார்.

இது தொடர்பில் மற்றுமொரு செய்தி நிறுவனம் தெரிவிக்கையில் -

ஜனாதிபதியின் விமானத் தொடரணியில் மற்ற அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மூன்று விமானங்கள் இருந்ததாகத் தெரிவிக்கிறது.  

தற்போது விமானத்தில் பயணம் செய்த பயணிகள் குறித்த கூடுதல் விவரங்கள் எதுவும் தெரியவில்லை. 

அதேவேளை தேடுதலுக்கு உதவுவதற்காக ட்ரோன்களும் புறப்பட்டதாக ஈரானிய ரெட் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்தது

 ஊடகங்களின் செய்திகளின் படி விபத்து இடம்பெற்ற அப்பகுதியில் மோசமான வானிலை இருந்ததாகத் தெரிகிறது.  

 ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் இருந்து வடமேற்கே 600 கிலோமீட்டர் தொலைவில் அஜர்பைஜான் எல்லையில் உள்ள ஜோல்பா நகருக்கு அருகில் இந்த விபத்து நடந்ததாக அரசு தொலைக்காட்சி கூறுகிறது. அஜர்பைஜான் நாட்டின் எல்லையில் உள்ள அராஸ் ஆற்றின் மீது கட்டப்பட்ட கிஸ் கலாசி அணையை அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவுடன் இன்று காலை ரைசி திறந்து வைத்தார்.

இதற்கிடையில், மீட்பு குழுவினர் விமானத்தை தேடும் வீடியோக்கள் ஈரானிய ஒளிபரப்பாளர்கள் மற்றும் கத்தார் ஒளிபரப்பு "அல் ஜசீரா" ஆகியவற்றில் பரவி வருகின்றன.  

வீடியோக்களில், மீட்புப் பணியாளர்கள் ஒரு கிராமப்புற பகுதியில் கவலையான மன நிலையில் காணப்படுகின்றனர். என்று செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஹெலிகாப்டர் இருக்கும் இடத்தைக் குறிக்கும் வரைபடத்தை ஊடகங்கள் வெளியிட்டது.  

இது வடமேற்கு ஈரானில் கிழக்கு அஜர்பைஜான் பகுதியில் உள்ள வர்சாகான் மாகாணத்தில் உள்ள அரஸ்பரனின் காட்டில் உள்ள உசி கிராமம். இதற்கிடையில், பல்வேறு ஊடகங்கள் ரைசிக்காக பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



 

 

VIDEOS

Recommended