• முகப்பு
  • உலகம்
  • 3 வயது குழந்தையை நீரில் மூழ்கடிக்க முயன்றதாக பெண் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது  

3 வயது குழந்தையை நீரில் மூழ்கடிக்க முயன்றதாக பெண் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது  

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: Jun 23, 2024, 3:01:26 AM

டெக்சாஸில் உள்ள ஒரு பெண், 3 வயது குழந்தையை அடுக்குமாடி குடியிருப்புக் குளியல் தொட்டி யில் மூழ்கடிக்க முயன்று கொலை முயற்சி செய்ததாகவும், ஒரு குழந்தையை காயப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க-இஸ்லாமிய உறவுகளுக்கான கவுன்சிலின் டெக்சாஸ் பிராந்திய முஸ்லீம் மற்றும் பாலஸ்தீனியர்கள் என்று அடையாளம் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதே வேளை மாநில மற்றும் மத்திய சட்ட அமலாக்க அதிகாரிகள் இந்த சம்பவத்தை "வெறுக்கத்தக்க குற்றமாக விசாரிக்கவும், முஸ்லீம் குடும்பத்தையும் முஸ்லிம் சமூகத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மே 19 அன்று, Euless காவல் துறை அதிகாரிகள், ஒரு அடுக்குமாடி வளாகக் குளியல் நீர் தொட்டியில் இரண்டு பெண்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பான முறைப்பாடு தொடர்பில் விசாரித்தனர்.

 "அதிக போதையில் இருந்த ஒரு பெண் குழந்தையை நீரில் மூழ்கடிக்க முயன்றார் மற்றும் குழந்தையின் தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்" என்று சாட்சிகள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

 எலிசபெத் வுல்ஃப், 42 என அடையாளம் காணப்பட்ட அந்த பெண், வெளியேற முயன்றபோது அதிகாரிகளால் போதையில் கைது செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார், வுல்ஃப் அவர் எங்கிருந்து வந்தவர் என்று விசாரித்து வருவதாகவும், நீர் தொட்டியில் விளையாடிக்கொண்டிருக்கும் இரண்டு குழந்தைகளும் அவருடையது என்று காவல்துறையிடம் கூறினார்.  

தாயார் முஸ்லீம் மற்றும் ஹிஜாப், அல்லது இஸ்லாமிய தலைக்கவசம் மற்றும் அடக்கமான நீச்சலுடை அணிந்திருந்தார் என்று சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 



VIDEOS

Recommended