• முகப்பு
  • தமிழ்நாடு
  • ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேருக்கு  காவல் நீட்டிப்பு மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைப்பு.

ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேருக்கு  காவல் நீட்டிப்பு மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைப்பு.

கார்மேகம்

UPDATED: Jul 19, 2024, 7:41:52 AM

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த மாதம் 23 ந்தேதி 4 படகுகளில் மீன்பிடிக்க சென்ற 22 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்

இந்நிலையில் அந்த 22 மீனவர்களும் நேற்று ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது நீதிபதி 22 மீனவர்களையும் வருகிற 24 - ந்தேதி வரை மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார் அதைத்தொடர்ந்து 22 மீனவர்களும் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

VIDEOS

Recommended