கல்வியால் சிறந்த சமூகத்தைக் கட்டியெழுப்புவோம்

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Aug 25, 2024, 5:59:09 PM

கல்வியால் சிறந்த சமூகத்தைக் கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளை நோக்காகக் கொண்டு சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணி மற்றும் ஐ.என்.எஸ். ஒன்லைன் கல்லூரி இணைந்து நாடளாவிய ரீதியில் நடைபெற்ற பொது அறிவுப் போட்டியில் சுமார் 5000 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்தப் போட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற 200 மாணவர்களைக் கௌரவிக்கும் வகையில் பரிசளிப்பு மற்றும் சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் வடமேல் மாகாண சபை கேட்போர் கூடத்தில் I N S ஒன்லைன் கல்லூரியின் நிர்வாக தலைவி Naja தலைமையில் இடம்பெற்றது. 

 

இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக international human rights global mission ஊடகப் பணிப்பாளர் ஊடகவியலாளர்.ஏ.டபிள்யூ.எம்.பஸ்லான் , வைத்தியர் M.s.சிட்டிகொ யாழ் பல்கலைக்கழக மாணவரும், இளம் பேச்சாளரும்,செய்தி வாசிப்பாளருமான நிஹ்லான் ஜுனைதீன் , ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். 

இதன் போது குருணாகல் மாவட்ட வசதி குறைந்த 7 பாடசாலை மாணவர்கள் தேரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் பாடசாலை பேக் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் வெற்றி பெற்ற மாணவர்களின் திறமைக்கு முதலிடம் வழங்கப்பட்டு அவர்களின் திறமை வெளிக்கொணரப்பட்டது. இந்நிகழ்வில் மாணவர்களது திறமைகளை வெளிக்கொண்டுவரும் வகையில் கழை நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் போது பிரதம அதிதிகளாக கலந்து கொண்டவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு இந்நிகழ்வில் சுமார் 200 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் பரிசில்கள் மற்றும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

 

VIDEOS

Recommended