• முகப்பு
  • இலங்கை
  • இந்தியா சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மத வழிபாடுகளில் ஈடுபட்டார்

இந்தியா சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மத வழிபாடுகளில் ஈடுபட்டார்

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Dec 17, 2024, 7:14:27 AM

உத்தியோக அழைப்பை ஏற்று இந்தியா சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி அனுர திசாநாயக்க, புத்த கயாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க மகாபோதிக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் புதுடில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது.

original/dofoto_20241217_124233984
இந்த சந்திப்பின் போது, ​​இந்திய-இலங்கை இடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்துவது மற்றும் பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து கருத்துப் பரிமாறப்பட்டது.

சிநேகபூர்வ சந்திப்பின் பின்னர் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு இராப்போசன விருந்து வழங்கினார்.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோரும் இந்த சந்திப்பில் இணைந்து  கொண்டார்.

 

VIDEOS

Recommended