• முகப்பு
  • இலங்கை
  • டன்சினம் தொடக்கம் நுவரெலியா வரையிலான பிரதான பாதை மக்கள் பாவனைக்காக திறந்து வைப்பு

டன்சினம் தொடக்கம் நுவரெலியா வரையிலான பிரதான பாதை மக்கள் பாவனைக்காக திறந்து வைப்பு

அமைச்சின் ஊடகப்பிரிவு

UPDATED: Jul 20, 2024, 12:02:41 PM

2024 ஆம் ஆண்டின் 1000 கி.மீ வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் டன்சினன் இருந்து பூன்டுலோயா வழியாக நுவரெலியா செல்லும் பிரதான பாதையானது கார்ப்பட் இடப்பட்டு இன்றைய தினம்(20) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிதள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ ஜீவன் தொண்டமான், போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன மற்றும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோர்களால் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

பல வருட காலமாக குன்றும் குளியுமாக காணப்பட்டு வந்த 9 கி.மீ வரையிலான குறித்த பாதையானது அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் அமைச்சின் 13 பில்லியன் ரூபாய் நேரடி நிதி ஒதுக்கீட்டீன் மூலம், வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் கார்ப்பட் இடப்பட்டுள்ளது.

இந்த வீதியினை 30 க்கும் மேற்பட்ட தோட்டங்களை சார்ந்த பாடசாலை மாணவர்கள், வைத்தியசாலை தேவைளுக்கு, மற்றும் பல்வேறு வகையிலான தேவை பாடுகளுக்காக மக்கள் பயண்படுத்தி வந்தனர்.

குறிப்பாக இந்த வீதியினை புரமைத்து தருமாறு கடந்த காலங்களில் மக்களால் பல்வேறு ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எனவேதான் இதற்கான நீண்ட தீர்வினை பெற்றுக்கொடுக்கும் முகமாக இவ் அபிவிருத்தி வேலைத்திட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இதன் போது அனைவர் சார்பாகவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் மருதாபாண்டி ராமேஸ்வரன் அவர்களுக்கும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது. 

இன் நிகழ்வில் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிதள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன மற்றும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், இ.தொ.கா பிரதி பொதுச் செயலாளர் செல்லமுத்து, ஏனைய இ.தொ.கா பிரதிநிதிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மத்திய மாகாண பணிப்பாளர்  மகேந்திர விஜயபால, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நுவரெலியா மாவட்ட பிரதான பொறியியலாளர் சம்பத் சமரநாயக்க, நுவரெலியா பிரிவுக்கான நிறைவேற்று பொறியியலாளர்  மனோஜ் ஹேரத், நோர்வூட் பிரிவுக்கான பொறியியலாளர் தரிந்து ஶ்ரீ வர்த்தன தோட்ட பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 

VIDEOS

Recommended