• முகப்பு
  • இலங்கை
  • மறைந்த இரா. சம்பந்தனின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் வட மாகாண ஆளுநர்

மறைந்த இரா. சம்பந்தனின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் வட மாகாண ஆளுநர்

Irshad Rahumathulla

UPDATED: Jul 4, 2024, 12:21:15 PM

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர், மறைந்த இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடலுக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அஞ்சலி செலுத்தினார்.

original/inshot_20240704_172558541
இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா அரங்கில் வைக்கப்பட்டிருந்த மறைந்த சம்பந்தனின் பூதவுடலுக்கு  ஆளுநர் அஞ்சலி செலுத்தி, அவரது உருவப்படத்துக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

 

மேலும், அமரர் சம்பந்தனின் உறவினர்களுடன் காணிந்து தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டார்.

 இதே வேளை அமரர் சம்பந்தனின் பூத உடல் அவரது சொந்த ஊரான திருகோணமலையில் நாளைய தினம் முதல் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை திருகோண  மலையில் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

 

VIDEOS

Recommended