• முகப்பு
  • சென்னை
  • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் துப்பாக்கியை பயன்படுத்தவில்லை கத்தியால் வெட்டி தான் கொலை - ஆணையர் அஸ்ரா கார்க்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் துப்பாக்கியை பயன்படுத்தவில்லை கத்தியால் வெட்டி தான் கொலை - ஆணையர் அஸ்ரா கார்க்

நெல்சன் கென்னடி

UPDATED: Jul 6, 2024, 10:03:58 AM

Latest Tamil Crime News

பகுஜன் சமாஜ்வாதி தேசிய கட்சியின் மாநில நிறுவனத் தலைவர் மாயாவதி  கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக பயண செய்து வந்தார் 

நேற்று இரவு 8 மணி அளவில் மர்ம நபர்களால் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்யப்பட்டுள்ள நிலையில்

இதுகுறித்து சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் ஐபிஎஸ் செய்தியாளர்களை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சந்தித்து பேசினார்.

Latest Tamil News

அப்போது பேசிய அவர் ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து தற்போது 4 மணி அளவில் 8 நபர்களை கைது செய்து தீவிர விசாரணை செய்து வருவதாகவும் விசாரணைக்கு பின்னர் தான் கொலையின் நோக்கம் என்ன என்பது குறித்து தெரியவரும் எனவும்

தேசிய அரசியல் கட்சியின் தலைவருக்கே இந்த நிலைமையா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, கொலை சம்பவம் நடந்த வெறும் 4 மணி நேரத்தில் 8 நபர்களை கைது செய்து உள்ளதாகவும் 

கொலையின் உண்மையான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்றும் கைதானவர்கள் பெயர் விவரங்களை தற்போது தெரிவிக்க முடியாது என்றார்.

Crime news Updates 

உளவுத்துறை ஆம்ஸ்ட்ராங்கின் உயிருக்கு ஏற்கனவே ஆபத்து உள்ளதாக அறிக்கை கொடுத்ததாகவும் அதனை காவல்துறை கண்டு கொள்ளவில்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது குறித்த கேள்விக்கு ?

அது குறித்து துரைரீதியான விசாரணை உரிய நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் அளித்தார். 

மேலும் இந்த கொலை சம்பவத்தின் போது கொலையாளிகள் துப்பாக்கியை பயன்படுத்தவில்லை கத்தியால் வெட்டி தான் கொலை செய்துள்ளனர் என கூறினார்.

 

VIDEOS

Recommended