• முகப்பு
  • இலங்கை
  • வவுனியா பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்

வவுனியா பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்

வவுனியா

UPDATED: Jul 7, 2024, 4:28:26 AM

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் சத்யாகிரக போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வவுனியா பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்று கருப்பு உடையடைந்து கருப்பு கொடிகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வவுனியா பல்கலைக்கழகத்தில் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வரும் நிலையில் துணை வேந்தர்கள் தமது கோரிக்கைகள் தொடர்பில் பல்கலைக்கழக மானிய ஆணைக் குழுவுக்கு எவ்வித தகவல்களையும் தமது சார்பில் வெளியிடவில்லை என்பதை கண்டித்தும் இந்த கருப்புக்கொடி போராட்டத்தினை நடத்தி இருந்தனர்.

இதேவேளை பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் வீதி ஓரங்களில் கருப்புக் கொடிகள் பறக்க விடப்பட்டிருந்ததோடு துணைவேந்தர்கள் வருகை தந்த போது வரிசையாக நின்று தமது எதிர்ப்பினையும் கல்வி சாரா ஊழியர்கள் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



 

 

VIDEOS

Recommended