• முகப்பு
  • இலங்கை
  • தூர இடங்களில் இருந்து வருகை தந்த நோயாளர்கள் பாரிய அசௌகரியம் பதுலையில் சம்பவம்

தூர இடங்களில் இருந்து வருகை தந்த நோயாளர்கள் பாரிய அசௌகரியம் பதுலையில் சம்பவம்

ராமு தனராஜா

UPDATED: Apr 28, 2024, 6:41:24 AM

Sri Lanka Latest Breaking News and Headlines

பதுளை நகரில் உள்ள விஷேட வைத்திய நிபுணர்களின் சேவையை வழங்கும் பிரபல தனியார் மருத்துவமனையொன்றில் வைத்திய நிபுணரிடம் பரிசோதனைக்காக வந்த நோயாளிகளுக்கு கட்டணம் செலுத்தி இலக்கங்கள் வழங்கும் போது ஒரே இலக்கத்தை ஐவருக்கு வழங்கியுள்ளனர்.

விஷேட வைத்திய நிபுணர்

இதன் காரணமாக விஷேட வைத்திய நிபுணரிடம் நோயாளிகள் சிகிச்சை பெற வரிசையில் காத்திருக்கும் போது ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக, குறித்த வைத்தியருக்கு ஏற்பட்ட அசௌகரியத்தால் வைத்திய நிபுணர் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்காது மருத்துவமனையில் இருந்து வெளியேறி சென்றதாக நோயாளிகள் தெரிவித்தனர்.

இதன்காரணமாக தூர இடங்களில் இருந்து வருகை தந்த நோயாளர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

தனியார் மருத்துவமனை நிர்வாகம் தனது தவறை ஏற்றுக் கொள்ளாது மருத்துவ பரிசோதனைக்காக செலுத்தப்பட்ட பணத்தை நோயாளிகளுக்கு மீள வழங்கி அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் தூரப் பகுதிகளில் இருந்து சிகிச்சை பெறுவதற்காக வந்த பல நோயாளிகள் பாரிய அசௌகரியங்களுக்கு மத்தியிலேயே அங்கிருந்து திரும்பி சென்றனர். 

இருப்பினும் இவ்வாறான தவறுகள் ஏற்படாமல் தடுப்பது தனியார் மருத்துவமனையின் நிர்வாகத்தின் பொறுப்பாகும்.

VIDEOS

Recommended