• முகப்பு
  • இலங்கை
  • முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் அது பிரச்சினையை தீர்ப்பதற்காகவே பாராளுமன்றம் செல்ல வாக்களியுங்கள் -அருள் நாதன்

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் அது பிரச்சினையை தீர்ப்பதற்காகவே பாராளுமன்றம் செல்ல வாக்களியுங்கள் -அருள் நாதன்

இர்ஷாத் றஹ்மத்துல்லா

UPDATED: Oct 20, 2024, 11:10:26 AM

வடக்கு மீனவ சமூகத்துடைய பிரச்சினைகளை தனது தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் கலந்துரையாடி தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாக வன்னி மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் சம்மேளனத்தின்  தலைவரும் வேட்பாளருமான வீ.அருள் நாதன்  தெரிவித்தார்.

தமது தேர்தல் செயற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

 மேலும் அவர் கருத்துரைக்கையில் -

 வடக்கு மீனவர்களை குறிப்பாக முல்லைதீவு மாவட்ட மீனவர்களை ஒருபோதும் தான் கைவிடப் போவதில்லை என்றும் அவர்களது பிரச்சனைகளை தீர்ப்பதற்காக வேண்டிய தன்னுடைய பாராளுமன்ற பிரவேசத்தை உருவாக்க முயற்சிப்பதாகவும் இதன் போது குறிப்பிட்டார்.

 தலைவர் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சராக இருந்த காலத்தில் மீனவர்களுடைய பல்வேறு பிரச்சினைகளை தீர்த்ததாகவும் இதன் போது அவர் சுட்டிக் காட்டினார்.

 

VIDEOS

Recommended