நெல்லியடி வாணிபர் கழகத்தின் கௌரவிப்பு விழா

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: Jun 21, 2024, 8:24:31 AM

நெல்லியடி வாணிபர் கழகத்தின் கௌரவிப்பு விழாவின் பிரதம அதிதியாக வடக்கு மாகாண  ஆளுநர் கலந்துச் சிறப்பித்தார்.

நெல்லியடி வாணிபர் கழகத்தின் ஏற்பாட்டில் தனியார் விடுதியொன்றில் நடத்தப்பட்ட கௌரவிப்பு விழாவின் பிரதம அதிதியாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் கலந்துச் சிறப்பித்தார்.

original/inshot_20240621_134758816
இந்நிகழ்வில் நெல்லியடியை சேர்ந்த 15 வர்த்தகர்கள் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் கல்வி, மருத்துவம், சமயம், சமூக சேவைகளில் ஈடுபடும் 04 சான்றோர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

 இவர்களுக்கான நினைவு கேடயங்கள் ஆளுநரால் வழங்கப்பட்டதுடன், பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் நெல்லியடி பகுதியை சேர்ந்த 12 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.

 

VIDEOS

Recommended