• முகப்பு
  • இலங்கை
  • சுற்றுலாத்துறையை விருத்தி செய்தல் மற்றும் பிரதேசத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை ஆராய தீர்மாணம்

சுற்றுலாத்துறையை விருத்தி செய்தல் மற்றும் பிரதேசத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை ஆராய தீர்மாணம்

ஊடகப் பிரிவு: - கடற்றொழில் அமைச்சர்

UPDATED: Apr 12, 2024, 3:00:51 AM

நெடுந்தீவு பிரதேசத்தில் சுற்றுலாத்துறையை விருத்தி செய்தல் மற்றும் பிரதேசத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளன.

நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே குறித்த விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற   இக்கலந்துரையாடலில், இவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்படும் வேலைத் திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.

அதேபோன்று பிரதேசத்தின் முன்னேற்றத்திற்கு அத்தியாவசியமான கடல் போக்குவரத்து, வீதிப் போக்குவரத்து, விவசாயம், கடற்றொழில், கால்நடை அபிவிருத்தி, நீர்பாசனம், உட்பட பல்வேறு விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டன.

இதன்போது கருத்து தெரிவித்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நெடுந்தீவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று நிலமைகளையும் மக்களின் எதிர்பார்ப்புக்களையும் அறிந்து கொண்டதாகவும், ஜனாதிபதியுடன் கலந்துரையாடி நெடுந்தீவிற்கான விசேட நிதி ஒதுக்கீட்டினை பெற்றுக் கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VIDEOS

Recommended