• முகப்பு
  • இலங்கை
  • பிரசைகளால் தயாரிக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து திருகோணமலையில் தெளிவூட்டல் நிகழ்வு

பிரசைகளால் தயாரிக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து திருகோணமலையில் தெளிவூட்டல் நிகழ்வு

ஏ. எம். கீத்

UPDATED: Oct 17, 2024, 8:14:59 AM

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை மையப்படுத்தி, பிரசைகளால் தயாரிக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை உள்ளூர் அரசியல்வாதிகளுடன் பகிர்ந்து கொள்ளல் எனும் கருப் பொருளில் நிகழ்வொன்று  திருகோணமலை, உப்புவெளி தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள், தவிசாளர்கள், பிரதி தவிசாளர்கள் மற்றும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது, அரசியல்வாதிகளின் தேர்தல் விஞ்ஞாபனம் என்றால் என்ன? பிரசைகளின் தேர்தல் விஞ்ஞாபனம் என்றால் என்ன? போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இதன் வளவாளர்களாக, கிழக்கு மாகாண சமூக அபிவிருத்தி மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் முஹம்மது புஹாரி மற்றும் சட்டத்தரணி எம். எம். அசாட் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

VIDEOS

Recommended