உலகத் தமிழர் பூப்பந்தாட்ட போட்டிகள் யாழில் நாளை

வவுனியா

UPDATED: Jul 30, 2024, 1:03:37 AM

உலகத் தமிழர்களின் பூப்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் உலகளாவிய பூப்பந்தாட்ட வீரர்கள் பங்கேற்கும் போட்டிகள் யாழ் பல்கலைக்கழக பூப்பந்தாட்ட திடலில் இடம்பெற உள்ளது.

அதனைக் கண்டு களிக்க அனைவரும் வருகை தந்து எம்மவர்களின் ஆளுமையை காண வேண்டும் என உலக தமிழர் பூப்பந்தாட்ட சங்கத்தின் ஸ்தாபகரான கந்தையா சிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்,மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் -

பூப்பந்தாட்டம் என்பது ஒரு சிறந்த விளையாட்டாக காணப்படுகிறது. இந்த நிலையில் உலகத்தமிழர் பூப்பந்தாட்ட சங்கமானது ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடுகளில் இந்தப் போட்டிகளை நடத்தி வருகின்றது. இந்த வகையில் எனது தாய் நாட்டில் இதனை நடத்த வேண்டும் என்கின்ற அவாவில் நாம் இதனை மேற்கொண்டுள்ளோம். கடந்த பல ஆண்டுகளாக நாம் முயற்சித்த போதிலும் அரசியல் காரணங்களால் அதனை நடத்த முடியவில்லை.

எனினும் இம்முறை அதனை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு யாழ் பல்கலைக்கழக பூப்பந்தாட்டத் திடலில் நாளை மறுதினம் 31ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரை இடம் பெற உள்ளது. இதற்கான அனுமதி இலவசமாக காணப்படுகின்றது. எனவே அவர்கள் அனைவரும் வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன் என தெரிவித்தார்.

 

 

 

 

 

 

VIDEOS

Recommended