• முகப்பு
  • விளையாட்டு
  • மாநில அளவிலான குவோன்கிடோ சாம்பியன்ஷிப் போட்டிகள் திருச்சியில் நடைபெற்றது.

மாநில அளவிலான குவோன்கிடோ சாம்பியன்ஷிப் போட்டிகள் திருச்சியில் நடைபெற்றது.

JK

UPDATED: Oct 6, 2024, 2:21:06 PM

திருச்சி

6வது மாநில அளவிலான குவோன்கிடோ சாம்பியன்ஷிப் போட்டிகள், மற்றும் தேசிய அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் பங்கு கொள்வதற்கான வீரர்கள் தேர்வு திருச்சி பொன்மலைபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பயிற்சியாளர் சந்துரு தலைமையில் நடைபெற்றது.

போட்டிகளில் திருவாரூர், , சேலம், கோயமுத்தூர், ஈரோடு, திருச்சி, நாமக்கல், , நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வீரர் -வீராங்கனைகள் பங்கேற்றனர்.

குவோன்கிடோ

போட்டிகள் 8, 10, 12, 14, 17, 19 வயதுக்குட்பட்ட மற்றும் 19வயதிற்கு மேற்பட்ட வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றனர்.

வெற்றி பெற்ற அணிகளுக்கு சிறப்பு விருந்தினராக திருச்சி சரக மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கோப்பைகளையும், பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்.

Latest Sports News In Tamil

மேலும் இந்நிகழ்வில் தமிழ்நாடு குவோன்கிடோ சங்கத்தின் நிர்வாகத் தலைவர் பயிற்சியாளர் ராஜகோபால், தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் கிருஷ்ணன், ராயல் லைன்ஸ் கிளப் நிர்வாகி சஃபி, பொன்மலை பகுதி வர்த்தக அணி அமைப்பாளர் குமார், கோவை டெக்டிகல் டைரக்டர் பிராங்கிளின் பென்னி ஆகியோர் கலந்து கொண்டனர்.

போட்டிகளுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு குவான் கிடோ சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆரவல்லி மற்றும் குவோன்கிடோ சங்கத்தினர் செய்திருந்தனர்.

இப்போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் - வீராங்கனைகள் நவம்பர் மாதம் 8ம்தேதி முதல் 10ம்தேதி வரை மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளில் பங்கு பெற உள்ளனர்.

 

VIDEOS

Recommended