• முகப்பு
  • விளையாட்டு
  • 2 நாட்கள் இறுதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் - திருச்சி தேசிய கல்லூரி மைதானத்தில் அகண்ட திரையில் ரசிகர்கள் பார்க்க சிறப்பு ஏற்பாடு.

2 நாட்கள் இறுதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் - திருச்சி தேசிய கல்லூரி மைதானத்தில் அகண்ட திரையில் ரசிகர்கள் பார்க்க சிறப்பு ஏற்பாடு.

JK

UPDATED: May 17, 2024, 1:25:39 PM

ஐபிஎல் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது நிலையில் வருகின்ற 18ஆம் தேதி நாளை சென்னை பெங்களூர் அணி மோதுகின்றன.

அதேபோன்று 19ஆம் தேதி மதியம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பஞ்சாப் கிங் சனி மோதுகின்றன இரவு ராஜஸ்தான் ராயல்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன அத்துடன் ஐபிஎல் லீக் போட்டிகள் நிறைவடைகின்றது.

இந்த போட்டிகளை தொலைக்காட்சி மற்றும் கைபேசிகளில் ரசிகர்கள் பார்த்திருந்தாலும் பல்வேறு மாநிலங்களில் பிசிசிஐ சார்பாக ரசிகர்கள் அகண்ட திரையில் பார்க்க ஏற்பாடு செய்யப்படுகிறது. 

அதன் ஒரு பகுதியாக திருச்சியில் உள்ள தேசிய கல்லூரி மைதானத்தில் இந்த 2நாட்கள் ஃபேன்ஸ் பார்க் என்ற பெயரில் ரசிகர்கள் அகண்ட திரையில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அங்கு வரக்கூடிய ரசிகர்கள் உற்சாகப்படுத்தும் விதமாக பல்வேறு கேளிக்கை விளையாட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரசிகர்களுக்கு எவ்வித அனுமதி கட்டணம் இன்றி முற்றிலும் இலவசமாக பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

VIDEOS

Recommended