• முகப்பு
  • விளையாட்டு
  • நவம்பர் மாதம் நடைபெற உள்ள தேசிய அளவிலான கூடோ போட்டிகள் - திருச்சியில் வீரர் - வீராங்கனைகளுக்கு சிறப்பு பயிற்சி

நவம்பர் மாதம் நடைபெற உள்ள தேசிய அளவிலான கூடோ போட்டிகள் - திருச்சியில் வீரர் - வீராங்கனைகளுக்கு சிறப்பு பயிற்சி

JK

UPDATED: Sep 30, 2024, 7:41:57 PM

திருச்சி 

குஜராத் மாநிலம் சூரத்தில் நவம்பர் மாதம் 5ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை தேசிய அளவிலான கூடோ போட்டிகள் நடைபெற உள்ளது.

இதனைத் தொடர்ந்து 15வதுதேசிய அளவிலான அக்ஷய்குமார் கூடோ போட்டிகள், 5வது ஃபெடரேஷன் கோப்பைகளுக்கான போட்டிகளும் நடைபெற உள்ளது. 

தமிழகத்திலிருந்து போட்டிகளில் பங்கு பெறும் வீரர் - வீராங்கனைகளுக்கு கூடோ சிறப்பு பயிற்சி பட்டறை திருச்சியில் உள்ள தமிழ்நாடு கூடோ தலைமை பயிற்சி அலுவலகத்தில் மாநில கூடோ பயிற்சியாளர் கந்த மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

கூடோ போட்டி

இந்த பயிற்சி பட்டறையில் திருச்சி, நாமக்கல், சென்னை, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, நாகைப்பட்டினம், கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.

பயிற்சி பட்டறையில் பங்குபெற்ற வீரர் - வீராங்கனைகளுக்கு தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது.

மேலும், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கு பெற உள்ள வீரர் - வீராங்கனைகளுக்கான தேர்வுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இவர்கள் நவம்பர் மாதம் நடைபெற உள்ள தேசியப் போட்டிகளில் பங்கு பெற உள்ளனர்.

மேலும், நடைபெற்ற கருப்பு பட்டைகளுக்கான போட்டிகளில் தகுதி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு கருப்பு பட்டையும், அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இப்பயிற்சி பட்டறையில் பயிற்சியாளர்கள் ஷேக் அப்துல்லா, மற்றும் பிராங்கிளின் பென்னி ஆகியோர் சிறப்பு பயிற்சியை வழங்கினர்.

 

VIDEOS

Recommended