காத்தான்குடியில் நோன்புப் பெருநாள் மற்றும் சித்திரைப் புத்தாண்டு விழா

உமர் அறபாத் - ஏறாவூர்

UPDATED: Apr 22, 2024, 6:07:54 PM

காத்தான்குடி சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டில் நோன்புப் பெருநாள் மற்றும் சித்திரைப் புத்தாண்டு விழா  ஹிழுறிய்யா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

original/img-20240422-wa0176
காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ.உதயஸ்ரீதர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காத்தான்குடி சமுர்த்தி வங்கி முகாமையாளர் எம்.ஏ.எம்.சுல்மி, உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா, கணக்காளர் கே.சித்ரா, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.தனூஜா, நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.ற ஊப்,

 கிராம நிருவாக உத்தியோகத்தர் எம்.எம்.ஜறூப், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பத்மா ஜெயராஜ், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் ஆ. வாமதேவன், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் எஸ்.கண்ணன். புதிய காத்தான்குடி சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில், தேசிய நீர் வழங்கள் அதிகாரசபையின் காத்தான்குடி பிரிவு பொறியியலாளர் எம்.ஸமட், இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஏ.டபில்யுள் இர்ஷாத் அலி, மற்றும் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பாரம்பரிய விளையாட்டுக்களான யானைக்கு கண் வைத்தல், முட்டி உடைத்தல், தீப்பந்தம் வீசுதல், தேங்காய் துருவுதல் ,சாக்கோட்டம், தொப்பி மாற்றுதல் தேசிக்காய் ஓட்டம், பனீஸ் சாப்பிடுதல், சங்கிளி கதிரை ஓட்டம் , பலூன் உடைத்தல் மெதுவாக சைக்கில் ஓட்டுதல் போன்ற விளையாட்டுகள் இடம்பெற்றதுடன் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

VIDEOS

Recommended