அன்னை சித்தர் ராஜகுமார் சுவாமிகள் 4ம் ஆண்டு குருபூஜை விழா

எஸ் ஆர் எம்

UPDATED: Jul 24, 2024, 12:55:01 PM

இன்றைய்ய தினம் பெரம்பலூர் எளம்பலூர் பிரம்மரிஷி மலை அருள்மிகு காகன்னை ஈஸ்வரர் திருக் கோயிலில் ஸ்ரீலஸ்ரீ அன்னை சித்தர் ராஜகு மார் சுவாமிகளின் 4 ஆம் ஆண்டு குரு பூஜை விழா சிறப்பாக நடந்தது.

original/img-20240724-wa0207
விழாவிற்கு மகாசித் தர்கள் அறக்கட்டளை இணை நிறுவனர் ரோகினி மாதாஜிதலைமை வகித் தார். அறங்காவலர்கள் தவயோகி சுந்தரமகாலிங் கம் சுவாமிகள், தவயோகி தவசிநாதன் சுவாமிகள் முன்னிலை வகித்தனர்.

விழாவை முன்னிட்டு அதிகாலை அகவல் பாராயணம் சன் மார்க்க அன்பர்களால் படிக்கப்பட்டது. அதன் பின்னர் ஒசூர் வேலனடிமை சுவாமிகள் அன்னை சித் தரின் குருபூஜை விழா வினை புதுவை மற்றும் பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷிமலை அன்னை சித்தர் ராஜகுமார்,திருவாரூர் சிவபூதக்கண வாத்திய இசையுடன், அபிஷேக அலங்கார யாக பூஜைகளை செய்தார்.

சாதுக்கள் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.ஏழு மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரமும் , எளம்பலூர் அரசு பள்ளி 10, 12ம் வகுப்பு 2024 முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுத்தொகையும்,

சுவாமிகளின் 4ம் ஆண்டு குரு பூஜை விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக தையல் இயந்திரமும் வழங்கிய திட்டக்குடி ராஜன்,மற்றும் சிவசேனா தமிழ்நாடு மாநில தலைவர்  சசிகுமார் ஆகியோர்.

இந்த நிகழ்வில் மகா சித்தர்கள் டிரஸ்ட் இணை நிறுவனர் ரோகினி, அறங்காவலர் தவயோகி தவசிநாதன் சுவாமிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட சாதுக்களுக்கு வஸ்திரதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீ தம்பிரான் சுவாமிகள், பெரம்பலூர் பாரத ஸ்டேட் வங்கி முதன்மை மேலா ளர் பிரியவதனா, திட்டக் குடி ராஜன், வடலூர் தெய்வநிலைய அறங்கா வலர் குழு தலைவர் கிஷோர் குமார், சிவசேனா தமிழ்நாடு மாநிலத் தலைவர்  சசிகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் சிங்கப்பூர் குருகடாக்ஷம் பாபாஜி பொன்மணிவண்ணன், ரமணி மாதாஜி, டாக்டர் ராஜா சிதம்பரம், அரசு வக்கீல் சுந்தர்ராஜன், பொறியாளர் கண்ணபி ரான், துறையூர் சதுரகிரி உட்பட பலரும் இதில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

Recommended